#சிரியாவின் பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா
#சிரியாவின் பெயரில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையானவையா தற்போது சிரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை, ஊடகங்கள் சிரியாவில் பாதிக்கப்படுபவர்களை புறக்கணிக்கின்றன, சிரியாவில் மிகப்பெருமளவிலான கொலை நடந்திருக்கிறது, போன்ற தலைப்புகளுடன் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள் பரவிவருகின்றன. இவை உண்மைதானா என்பது குறித்த ஆய்வு இது. சிரியாவில் நிலைமை மோசமாக இருப்பது உண்மையான கூற்று. குறிப்பாக கிழக்கு கூட்டாவில். எனினும் இந்த செய்திகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல புகைப்படங்கள் சமீபமாக சிரியாவில் உள்ள சச்சரவுகளோடு தொடர்பில்லாததாக உள்ளன. பலர் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இவை சிரியாவில் தற்போது எடுக்கப்பட்டவை என சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். ஆனால் அவற்றுக்கும் கடந்த வாரம் சிரியாவில் நடந்த சிரிய அரசுப் படைகளின் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லாததாக உள்ளன. #புகைப்படம்_01 இது மே 27, 2003ஆம் ஆண்டில், இராக்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். மார்கோ டி லாரோ என்ற புகைப்படக் கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 40 கி